ஞாயிறு, 27 அக்டோபர், 2019

எம் ஜி ஆருக்கு சிலை வைக்காதீர்கள்.


எம் ஜி ஆர் ரின் தனிப்படட வாழ்கை , மிகவும் சாதாரணமானது. அதை பற்றி பேச தேவை இல்லை.

அவருடைய அரசியல் வரலாறு நல்லதும் கெட்டதும்  நிறைந்தது. அவர் தனது இளமைக்கால கஷ்டமான வாழ்க்கை அனுபவத்தால், ஏழை மக்களிடத்தில் அன்பு கொண்டவராக இருந்தார்

அவர் கட்சி ஆரம்பித்தவுடன் , தி மு க அரசை நீக்குவதற்கு தவறான முறைகளை கடைபிடித்தார். ஊழல் குற்ற சாட்டுகளை டெல்லிக்கு கொண்டு சென்று , தி மு க அரசை 1975 இல் கலைக்க செய்தார்.
தி மு க வினர், 1980 இல் அதையே திரும்ப செய்து காட்டி எம் ஜி ஆர் அரசை கலைத்தனர்.
அரசியலை சுயநலத்துடன் எடுத்து சென்றவர் அவர். தமிழக ஊர்களில் தி மு க , அ தி மு க வினர் பேசாத நிலையை உண்டாக்கியவர்.

மது ஆலைகளை தமிழகத்தில் முதன் முறையாக தொடங்கி தவறு செய்தவர்.

வெந்நிறை ஆடை நிர்மலாவுக்கு எம் எல் சி பதவி கிடைக்க,  அவரிடம் லட்சக்கணக்கான ரூபாயை நேரில் கொடுத்ததால் , அவர் தண்டனை அடைய வழி  செய்த்தவர். அவருக்கு எம் எல் சி பதவி கிடைக்காததால் , மேல் சபையை கலைத்து விட்டார். அரசியல் அரசாங்க நிவாகத்தில் ஒரு தூணையே சரித்து விட்டவர். மற்ற மாநிலங்களில் மேல் சபை இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் இல்லை. பட்டதாரிகளின் குரல், ஆசிரியர்களின் குரல் , சட்ட சபையில் ஒலிக்க வழியில்லாமல் செய்து  விட்டவர்.

பிரபாகரனுக்கு காசு கொடுத்து ஆயுத போராட்டதை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். ஆனால் 1987 இல் ஐ பி கே எப் (இந்திய அமைதி படை ) இலங்கையில் பிரபாகரனின்  படையுடன் சண்டையிட்ட போது , ஆயிக்கணக்கில் மக்கள் மடிந்தபோது, அதை தடுக்கும் வல்லமை இல்லாதவர்.  

தமிழர்களே , தயவு செய்து எம் ஜி ஆருக்கு சிலை வைக்காதீர்கள். கட்சி தலைமையையும் ஆட்சி தலைமையையும் தன் ஒருவரிடத்திலே வைத்து தவறான வழியை காட்டியவர்தான் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக