சனி, 3 அக்டோபர், 2020

ஸ்ரீ லங்காவில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் , நம்மவர்களே!

 ஸ்ரீ லங்காவின் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் , நம்மவர்களே  என்று சொல்கிறேன். ஆனால் பலர் அவர்கள் நம்மவர்கள் இல்லை , அவர்கள் வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள் .  தமிழர்களுக்கு தங்கள் வரலாறு தெரியாது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அதனால்தான் தமிழர் வரலாறு பற்றி  எழுதி வருகிறேன் . வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் பாண்டிய நாட்டு தமிழ் பெண்களை மணந்தார்கள், ஆனாலும் சிங்களவர்கள் தனி இனமாகவே வாழ்ந்தனர்.

நான் சொல்வது  இன்றைய தினம், சிங்கள அரசியலில்  அதிகாரம்  செலுத்துபவர்கள் , நம்மவர்களே என்பதுதான்.

எப்படி என்பதை இப்போது சொல்கிறேன். மதுரை தெலுங்கு நாயக்கர்கள் சிங்கள மன்னர்களுடன் மண உறவு வைத்திருந்தனர். மதுரையில் நாயக்கர்கள் ஆட்சியை முகலாய அதிகாரிகளிடம்  இழந்தபோது , நாயக்க ஆட்சியாளர்கள், தமிழ் மற்றும் பிராமண அதிகாரிகளுடன் , தங்கள் சகோதரி அதிகாரத்தில் இருக்கும் கண்டிக்கு , 17 ஆம்  நூற்றாண்டு  இறுதியில்  சென்றனர். அங்கு தங்கைக்கு குழந்தை இல்லாததால் , தெலுங்கு நாயக்க சகோதரனே ஆட்சியை பெறுகிறான். தங்களை புத்த மதத்திற்கு மாற்றி , சிங்களவர்களாக மாறுகிறார்கள்.

அதன் முதல் கண்டியில் தெலுங்கு நாயக்க ஆட்சி ஆரம்பம் ஆகிறது.  அதன் பிறகு ஆங்கிலேயரிடம் அதிகாரத்தை  இழந்த இவர்கள் , சுதந்திரத்திற்கு பிறகு  மீண்டும்  அரசியல் அதிகாரத்தை பெறுகிறார்கள், தமிழர்களுக்கு சம உரிமை மறுக்கிறார்கள்.

அதனால்தான், பண்டார நாயக்கே (தெலுங்கு) , அதுலத் முதலி (தமிழ்) மற்றும் பிராமண சிங்களவர்கள் அதிகாரத்தில் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். 

இப்போது சொல்லுங்கள், வைகோவும் (தெலுங்கு), கருணாநிதியும் (தெலுங்கு) நம்மவர்கள் என்னும் போது , இன்றைய ராஜ பக்சேயும்  நம்மவர்கள்தானே . ( இவர்கள் துண்டு போடும் முறையை பாருங்கள் ) ஒரே மாதிரி இருக்கும். தெலுங்கு சாயல் தெரியும்.