சனி, 8 டிசம்பர், 2018

காமராஜர் பெயர் சொல்லாத நன்றி கெட்ட பாப்பையா பட்டி மன்ற உறுப்பினர்கள்.

காமராஜர் பெயர் சொல்லாத நன்றி கெட்ட பாப்பையா பட்டி மன்ற உறுப்பினர்கள்.
நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த பாரதி விழாவில் நடைபெற்ற பாப்பையா பட்டி மன்றம் பார்த்தேன்.
தலைப்பு - இந்திய சுதந்திர போரின் வெற்றி , அகிம்சையான போராட்டத்தால் கிடைத்ததா? அல்லது தீவிரவாத போராட்டத்தால் கிடைத்ததா? என்பதே.
பேசியவர்களின் ஒரு சிலர் மட்டும் , முத்துராமலிங்க தேவர், வேலுநாச்சியார், வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, பாரதி போன்ற தமிழக விடுதலை வீரர்கள்   பற்றி  பேசினார்கள்,தேசிய  விடுதலை போராட்டத்தில், தமிழகத்தில் ,பங்கேற்ற  தலைவர்கள் பெயரை கூட சொல்லாமல் , பட்டி மன்றம் முடிவு பெற்றது , மிகவும் வருத்தமாக இருந்தது.
காந்திஜியின் தலைமை ஏற்று , தன் இளமை முழுவதையும் இந்திய  விடுதலை வேள்வியில் செலவு செய்த காமராஜர் பெயரை சொல்லாமல், கொடி ஏந்தி உயிர் விட்ட திருப்பூர் குமரன், உப்பு சதியாகிரகத்தை , தமிழகத்தில் தலைமை ஏற்று நடத்திய ராஜாஜி , பாராளுமன்றத்தில், சிங்கமென கர்ச்சித்த  தீரர் சத்யமூர்த்தி , ஜீவா, போன்ற எண்ணற்ற தமிழக விடுதலை வீரர்களை பற்றி சொல்லாமல் , வட இந்திய தலைவர்கள் பற்றி பேசி , நம்மை பற்றிய அறிவு நமக்கு இல்லை என்பதை  உணர்த்திய சாலமோன் பாப்பையாவையும், மற்ற பட்டி மன்ற உறுப்பினர்களையும் கடுமையாக கண்டிக்கிறேன்.
உலகிலேயே , முதல் முதலாக ஒரு கவிஞருக்கு  அரசு விழா எடுத்தது , காமராஜர் ஆட்சியில், தேசிய கவி பாரதியாருக்கு தான். பாரதி , நம் மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டி நின்றான். அதை , நிறைவு செய்யும் விதமாக , நம் மக்களை படிக்க வைத்த காமராஜரை , பற்றி பேசாமல் , பாரதி விழா எப்படி நிறைவு பெறும்?

1 கருத்து: