செவ்வாய், 14 ஜூலை, 2020

உன் பெயர் காமராஜ்

தமிழ் சமூகத்தின் உயர்வின் அடையாளம் காமராஜ்.

                              kamarajar,nehru,indra | Indian history, Indira gandhi, National heroes

உனக்கென்று சொத்து சேர்க்காத தலைவா ! நீவீர்
ஊருக்கென்று சேர்த்த சொத்துக்களில் சில !
திருச்சி பெல், நெய்வேலி நிலக்கரி சுரங்கம்,
திருநெல்வேலி தொழில் பேட்டை, பெரம்பூர் ஐ சி  எப்
ஆவடி டாங்க் , கிண்டி  தொழில் பேட்டை
குந்தா மின் நிலையம் , மேட்டூர் நீர்மின் நிலையம் ,
அம்பத்தூர் தொழில் பேட்டை, தூத்துக்குடி துறைமுகம்
அமராவதி அணைக்கட்டு, ஆரணி ஆறு அணைக்கட்டு
, ஆழியாறு அணைக்கட்டு , வைகை அணைக்கட்டு ,
மணிமுத்தாறு அணைக்கட்டு , கிருஷ்ணகிரி அணைக்கட்டு ,
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி , தஞ்சை மருத்துவ கல்லூரி , மெட்ராஸ்  ஐ ஐ டி , சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, இன்னும் பல . இது ஒன்பது ஆண்டுகளில்  உருவாக்கப்பட்டவைகள்.
இருபத்து  எட்டு ஆண்டுகள் விடுதலை போரில் பங்கேற்பு , அதில்
எட்டு ஆண்டுகள் விடுதலை போரை வழி  நடத்திய
பெருந்தமிழரே !
 நேருவுக்கு பின் யார் என்ற கேவிக்கு இரு முறை பதில் தந்த பெருந்தலைவா ! காமராஜ் என்ற தமிழ் சமூகத்தின்  பெருமையே ! செல்வமே!
இன்று உனது பிறந்த நாள்! தமிழர்களின் எழுச்சி நாள்!கல்வியின்  வளர்ச்சி நாள் !
உனது வழி , பாரதத்தின்  ஒற்றுமையின் வழி ! உனது வழி தமிழர்களின் உயர்வுக்கான வழி !.
உன்னை தினம் நினைத்து , உனது பெயர் சொல்வதால் பெருமை அடைகிறோம் ! தமிழர்களின் முன்னேத்தி ஏறு நீ !
உன் வழி நடப்போம் ! நாட்டின் ஒற்றுமைக்காக உழைப்போம். உயர்வு அடைவோம்! 
  

செவ்வாய், 5 மே, 2020

உங்களை வேண்டுகிறேன் "டாஸ் மாக் வேண்டாம்"

உங்கள் அன்பிற்குரிய காளிராஜா தங்கமணி வேண்டிக்கொள்வது : மனித குலம் ,ஒரு முக்கியமான கால கட்டத்தில் வாழும் நேரம், கொரோன நோய் தொற்று நடைபெறும் காலம் இது . மனித குலத்தின் அங்கமான தமிழ் நாட்டு சமூகம் , தன்னை கட்டுப்படுத்தி வாழ வேண்டிய தருணம் இது. இந்த சமூகம் திருவள்ளுவர் , ஒவ்வையார் வழி வந்து , நடக்கும் சமூகம். பெருந்தலைவர் காமராஜர் வழி நடத்திய சமூகம். தங்களை கட்டுப்படுத்தி , சுகாதாரமான , மகிழ்ச்சியான குடும்பங்களை உருவாக்க வேண்டியது நமது ஒவ்வொருவர் கடமையாகும்.
மது குடிப்பதனால் , உழைத்த சம்பளம் வீட்டுக்கு வந்து சேரா நிலை , நிறைய குடும்பங்களில் இருப்பதால், துயரத்தோடு வாழும் நிலை இருக்கிறது. இது மாற வேண்டும். நாம் நம்மை கட்டுப்படுத்தி , மதுவில்லா சமூகத்தை உருவாக்கி , நமது பேர பிள்ளைகள், அதற்கு பிறகு வரும் வருங்கால சந்ததியினர், நல்ல சுகாதாரத்துடன் , மகிழ்ச்சியாக , "உணவே மருந்து , மருந்தே உணவு என்ற நமது முன்னோர்கள் - சித்தர்கள் காட்டிய பாதையில்" வாழ வழி உருவாக்க வேண்டும்.
அதற்கான தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். தமிழ் நாடு சமூகத்தை வழி நடத்தி கொண்டிருக்கும் இரண்டு தமிழ் சமூகத்தின் பிள்ளைகளுக்கு , நாம் நமது விருப்பத்தை , ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டிய தருணம் இது.
ஆதலால் மது இல்லாத தமிழ் நாடு சமூகம் உருவாக்க , உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் " டாஸ் மாக் வேண்டாம்" என்று , மதிப்பிற்குரிய நமது முதல்வர் இ பி எஸ் மற்றும் துணை முதல்வர் ஒ பி எஸ் அவர்களுக்கு, அவர்களுடைய டுவிட்டர் பக்கத்தின் மூலமாகவோ அல்லது "முதல் அமைச்சர் செல் பக்கத்தின் " மூலமாகவோ கண்டிப்பாக இன்றே தெரிவியுங்கள். உங்கள் ஆதரவு நமது வருங்கால தமிழ் நாடு தலைமுறை பிள்ளைகளின் நல் வாழ்வுக்கு வழி கோலும். தமிழ் சமூகம் , மனித குலத்தின் ,மதிப்பு மிக்க அங்கமாக அமைந்திட , உங்கள் உதவி மிகவும் அவசியம். நன்றி.

புதன், 12 பிப்ரவரி, 2020

சிரியன் கிறித்துவ பெண் சூசன் இல்லியாசை சந்தித்தேன்


                                                                          
                                              முனைவர் சூசன் இல்லியாசிஸ்

 சிரியன் கிறித்தவர் சூசன் இல்லியாசிஸ் , திருப்பதி வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரிக்கு வந்த போது , அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
சிரியன் கிறித்தவர்கள் பற்றி அவர் சொன்ன விஷயங்கள் , அரிய  செய்தியாக இருந்தது. சிரியன் கிருத்தவர்கள் மற்றவர்களை ,மத மாற்றம் செய்வதில்லை என்று சொன்னார். அவர்கள் ஒரு குடும்பத்தை போன்றவர்கள் என்றும் , மற்ற எவரும் மதம் மாறி , சிரியன் கிருத்துவர்களாக ஆக முடியாது என்று சொன்னது வியப்பாக இருந்தது.
    ஏசு கிறிஸ்துவின் நேரடி சீடரான புனித தாமஸ் அவர்கள் கேரளாவிற்கு வந்து , கி பி 52 ஆம் ஆண்டு , நான்கு நம்பூதிரி பிராமணர்களை , கிருத்துவர்களாக மாற்றி , சிரியன் கிருத்தவ சமூகத்தை உருவாக்கியதாக சொன்னார். அந்த நான்கு குடும்பத்தின் 2000 ஆண்டு தொடர் வரலாறு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. மாமன்னன் ராஜ ராஜ சோழன் சந்ததியர் பற்றி தமிழர்கள் கண்டுபிடிக்க திணறும் போது , மலையாள சிரியன் கிருத்துவர்கள் வரலாற்றை பேணி நிற்பது கண்டு பிரமிப்பாக இருந்தது.
   சிரியன் கிறித்தவர்கள், சிரியா நாட்டில் பழக்கத்தில்  இருந்து வரும் முறையில் வழிபாடு செய்வதாகவும் , சிரியன் மொழியை பயன் படுத்துவதாகவும் அவர் சொன்னார். எப்படி பிராமணர்கள் சமஸ்கிருதத்தில் வழிபாடு செய்கிறார்களோ, அதைப்போல இவர்களும் சிரியன் மொழியில் ஸ்லோகங்களை உபயோக படுத்துவதாக சொன்னார். சிரியன் மொழி ஏசு நாதர் பேசிய அராமைக் மொழியோடு தொடர்புடையதாக சொன்னார்.
இவருடைய குடும்பத்தின் 500 ஆண்டு , சந்ததி வரலாறு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். கொச்சி பக்கத்தில் உள்ள அடங்காபுரம் குடும்பம் , அவர்களின் குடும்பமாக சொன்னார்.
   ஆங்கிலேயருடைய காலத்தில் கல்வி கற்க , சென்னை லயோலா கல்லூரிக்கு வந்த அவருடைய மூதாதையர் , இங்கேயே தங்கி, மாநகராட்சியில் அரசாங்க வேலை செய்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு போகும் போது, அவர்களிடம் இருந்து  பாரிஸ் கார்னரில் ஒரு கிருத்தவ ஆலயத்தை , 100 ஆண்டு கட்டு குத்தகைக்கு வாங்கியதாக சொன்னார். 300 ஆண்டு பழைமை வாய்ந்த அந்த ஆலயம் இன்றும் சிறப்பாக செயல்படுவதாக சொன்னார். இன்றைக்கு சிரியன் கிருத்தவர்கள் 16 ஆலயங்களை சென்னையில்  கட்டி , பரந்து விரிந்து இருப்பதாக சொன்ன அவர் , சென்னை  எம் எம் எம் மருத்துவமனை உட்பட  நிறைய பள்ளிகள், மற்றும் மருத்துவ , பொறியியல் கல்வி கூடங்களை சிறப்பாக நடத்துவதாக தெரிவித்தார்.
   தமிழ் மற்றும் மலையாளம் பேச மட்டுமே தெரியும் என்று சொல்லும் சூசன் , வீட்டில் ஆங்கிலத்தை அதிகம் உபயோகிப்பதாக சொல்கிறார்.
தமிழ் நாட்டு சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கும் சிரியன் கிறித்தவரான  இந்த சூசன் இல்லியாஸ் முதுகலை முனைவர் பட்டம் படித்த பொறியியல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தகுந்தது.    
 

திங்கள், 27 ஜனவரி, 2020

உரிமை பெற்ற தமிழ் சமூகத்தின் அடையாளம் - தமிழிசை சௌந்தரராஜன்

                                                                     


 தமிழிசை சௌந்தரராஜன் தமிழ் சமூகத்தின் நல்ல அடையாளமாக வளர்ந்து வருவது , நமது முன்னோர்கள் செய்த தவ பயனாகவே பார்க்கிறேன்.

 சிறு வயதில் பல வித விருப்பங்களுக்கு இடையே , தன்னை கட்டுப்படுத்தி ,தன் படிப்பில் கவனம் செலுத்தி வளர்வது கஷ்டமான விஷயமாகவே பார்க்கிறேன். அந்த விஷயத்தில் தன்னை சரியாக வழி நடத்தி , கல்வி கற்பதில் , தன்னை முறை படுத்தி , அவர் கல்வி கற்று , ஒரு ஆங்கில மருத்துவ படிப்பு படித்த பெண்ணாக உயர்ந்தது , மற்ற பெண்களுக்கு நம்பிக்கை தரும் செயல். அவர் வெளி நாடு சென்று உயர் மருத்துவ கல்வி கற்று , தாயகம் திரும்பி , மருத்துவ பணி ஆற்றியது , மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயமாகும்.

 அவர் அரசியல் களத்தில் இறங்கி , பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உயர்ந்து நின்ற காட்சி, நமது சமூகத்தின் வளர்ச்சியின் அடையாளமாகவே பார்க்கிறேன்.   தமிழ் சமூகத்தின் சாதாரண பெண்களும் , நல்ல அரசியல் செய்ய முடியும் என்று, கடுமையான போராட்டங்களுக்கு இடையே நிரூபித்தது , அயராமல் அரசியல் களத்தில்,  எதிர் கருத்துக்களை சந்தித்தது , ஒரு பிரமிப்பு ஊட்டும் செயலாகவே அமைந்தது . அப்படி அவர் அரசியல் களத்தில் துணிந்து நின்ற காட்சிகள், நமது மக்களிடையே , மதிப்பையும்  நம்பிக்கையையும் உருவாக்கிய செயலாகும்.
  பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக , தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் , அரசியல் களத்தில், நல்ல விமசர்னங்களையும் , கடுமையான தரம் குறைவான எதிர் விமர்சனங்களையும் ஏற்று , அவர் வலம் வந்தார் என்பது , தமிழ் குல பெண்களுக்கு நல்ல முன் மாதிரியாக விளங்கினார் என்றே சொல்வேன்.
 அவருடைய கணவரின் உதவியோடு தான் , இந்த அளவுக்கு அவர் நமது சமூகத்திற்கு பணி ஆற்ற முடிந்தது என்பதை நாம் அறியும் போது , மகிழ்ச்சி தருவதை உணர முடிகிறது.
 அவர் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி கண்ட போதும் , துவளாமல் , அரசியல் பணி ஆற்றிய விதம் மகிழ்ச்சி அளிப்பதாகவே அமைந்தது.
அவர் செய்த அரசியல் பணியின் மதிப்பை அறிந்த அவர் கட்சியும் , அரசாங்கமும் அவருக்கு தெலுங்கானா ஆளுநர் பதவி கொடுத்து கௌரவித்தனர்.
 இன்று அவர் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர். ஆம் தமிழ் நாட்டை கி பி 1370 முதல் 1697  வரை ஆட்சி செய்த விஜய நகர சாம்ராஜ்யத்தின் தலைமை பகுதிதான் தெலுங்கானா மாநிலமாகும் . அதன் பிறகு 1697    முதல் 1801 வரை தமிழ் நாட்டை ஆண்ட ஆற்காடு நவாபை , ஆட்சி பொறுப்பில் அமர செய்த ஐதராபாத் நிஸாமின் தலைமை இடமான  ஐதராபாத்தில் ஆளுநராக பதவி வகிப்பது , தமிழ்  சமூகம் மிக பெரிய சுதந்திர போராட்டத்திற்கு பிறகு உரிமை பெற்ற சமூகமாக வளர்ச்சி அடைந்து இருப்பதையே காட்டுகிறது.
தமிழிசை சௌந்தரராஜன் உரிமை பெற்ற தமிழ் நாட்டு சமூகத்தின் அடையாளம்.
 உண்மையாக , உறுதியுடன்  உழைத்தால் , தமிழ் பெண்கள் , அரசியல் அதிகாரத்தின் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதை நிரூபித்து காட்டிய , தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு எனது நன்றிதனை அன்போடு தெரிவிக்கிறேன்.
 அவருடைய பெற்றோர் இலக்கிய செல்வர் குமரி ஆனந்தன் அவர்களின் குடும்பத்திற்கு நன்றி தெரிவிப்பதற்கு கடமைபட்டுள்ளேன்.
 பெருந்தலைவர் காமராஜர் வழி நடக்கும் அவர்கள் குடும்பம், அரசியல் உரிமை பெற்ற  தமிழ் சமூகத்தின்  நல்ல அடையாளமாக திகழ்கிறது.
 ஒவ்வொரு தமிழ் குடும்பமும் இந்த மாதிரி உறுதியுடன்  உழைத்து , உயர் நிலையை அடைந்து , நமது தேச விடுதலைக்காக உழைத்த ,சுதந்திர போர் வீரர்களுக்கு நன்றி செலுத்துவோம் .

புதன், 30 அக்டோபர், 2019

பொறியியல் வார்த்தைகள் தமிழில் - Engineering Words in Tamil

Assessment - தேவை மதிப்பீடு 

Conceptual or High Level Design - மேல்நிலை வடிவமைப்பு
Cost Benefit Analysis - திட்ட மேலாண்மை - பயன்-உழைப்பு பகுத்தறிதல்

Deployment - செயற்படுத்தல்
Detail Design - துல்லிய வடிவமைப்பு
Documentation - ஆவணப்படுத்தல்

Engine" அல்லது "Device"  - விசைப்பொறி  


Implementation - நிறைவேற்றல்

n-type - எதிர்-வகை

Maintenance - பராமரிப்பு

p-type - நேர்-வகை

Requirements Collection and Analysis  - தேவைகளை அறிதல்

semi conductor - குறை கடத்தி 
switches - நிலை மாற்றி

Testing - பரிசோதனை
Testing - operational readiness - செயற்படுநிலை பரிசோதனை
Testing - user - பயனர் பரிசோதனை
Testing - white box - தன்னிலை பரிசோதனை
Transistor    - திரிதடையம்,  மூவாயி

Work Breakdown Schedule - பணி - காலதேவை அட்டவணை