வெள்ளி, 21 ஜனவரி, 2022

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி ஏழு.

 

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி ஏழு.

தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு. தமிழர்கள் விடுதலை பெற்று இருபது ஆண்டுகள் , இந்திய அரசியல் அதிகாரத்தில் உச்சம் தொட்ட காலகட்டம், சறுக்கிய வருடம் அது.

நான் நிறைய நேரம் நினைப்பதுண்டு - தமிழர்களுக்கு வரலாறு தெரியாது என்று. ஒரு சிலரே வரலாறு பற்றிய அறிவை பெற்று இருக்கிறார்கள். பெரியார் வெ ரா , வரலாறு அறிந்தவராக இருந்தார். அண்ணா மெத்த படித்தவராக இருந்தாலும், வரலாறு பற்றிய திடமான உணர்வு இல்லாதவராக இருந்தவராகவே , நான் பார்க்கிறேன். அவரை அறிஞ்சர் என்று போற்றுகிறார்கள். அவருக்கு உண்மையான வரலாறு உணர்வு இருந்திருந்தால் , அவர் ஒரு விடுதலை வீரராக வளர்ந்து இருப்பார் என்பதே, எனது எண்ணம்.

அறுநூறு ஆண்டுகள் தமிழர்கள் அடிமை பட்டு இருக்கிறார்கள் என்ற அறிவு வந்தவுடன் , எந்தவொரு தமிழரும் விடுதலை போரில் குதிப்பது உறுதி.அண்ணா அதை செய்யவில்லை.

பாண்டியர்கள் 1311 ஆம் ஆண்டு தோற்கடிக்க பட்ட பின்பு, தமிழ் நிலம் அந்நியர் வசம் வந்தது. முதலில் சில காலம் இஸ்லாமியர்கள் மதுரையை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்த பின்பு, மதுரை விஜய நகர ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது மதுரை, கன்னட மற்றும் தெலுங்கு தளபதிகளால் ஆளப்பட்டு வந்தது.பின்பு மீண்டும் இஸ்லாமியரின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டில் உருவாக்க பட்டது. தஞ்சாவூர் பகுதி மராட்டியர் வசமானது.இடையில்  ஐரோப்பியர் சில இடங்களில் ஆதிக்கம் செலுத்தினர்.

1801ஆம் ஆண்டு தமிழகம் ஆங்கிலேயர் வசம் வந்தது. இப்படி அறுநூறு ஆண்டுகள் தமிழர்கள் அரசியல் அதிகாரம் இழந்தவராக இருந்தனர்.

ஆங்கிலேயர்கள் வந்தபின்புதான் தமிழ் நிலத்தின் வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த கால கட்டத்தில் தமிழர்கள் சில தடவை , அரசியல் தலைமை பெற முயற்சி மேற்கொண்ட வரலாறு இருக்கிறது. ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.என்பதுதான் உண்மை.

அதனால்தான் தமிழக விடுதலை போராட்ட காலம் , தமிழ் நிலத்தில் நடந்த இனிப்பான சம்பவமாக தெரிகிறது.

தமிழக விடுதலை போராட்டம் 1857 முதல் 1947 வரை  நடந்ததாக நான் பார்க்கிறேன்.ஏனென்றால் முந்தைய பாளையக்காரர்கள் செய்த போர் , ஒரு பாளையத்தை தான் உருவாக்கி இருக்க முடியுமே தவிர , மக்களுக்கு விடுதலை பெற்று தந்திருக்காது.

தமிழர்கள் இந்த அறுநூறு ஆண்டுகளில் அரசியல் தலைமை பதவியை அடைய முடியவில்லை.  1947 ஆம் ஆண்டு, நாடு விடுதலை பெற்றபோது, தமிழர்களும் விடுதலை பெற்றார்கள் என்பதுதான் உண்மை.

இங்கு ஒரு விஷயத்தை உணர வேண்டும் மைசூரு மக்கள்  விடுதலை பெற்றதும் தமிழர்கள் விடுதலை பெற்றதும் ஒரே நேரத்தில் தான். ஆனால் மைசூரு மக்கள் மற்றவர்களால் ஆளப்படவில்லை. ஆனால் தமிழர்கள் பிறமொழி பேசும் மக்களால் ஆளப்பட்டு வந்த நிலையை உற்று நோக்க வேண்டும்.

அவிநாசி செட்டியார் இந்திய அரசின் நிதி அமைச்சராக பதவி ஏற்றதும், சி சுப்பிரமணியம், பக்தவச்சலம் போன்றோர் பல வருடங்கள் நாட்டின் நிர்வாகத்தை பார்த்தார்கள் என்பது தமிழர்கள் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக மாறியதை காட்டுகிறது. சுதந்திர போராட்ட வீரர் கக்கன் , தமிழக உள்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் தமிழ் சமூகம் பெற்ற அரசியல் அதிகாரத்தின் ஏற்றம் என்றே நினைக்கிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் 1954 ஆம் ஆண்டு, தமிழ் புத்தாண்டு அன்று தமிழக முதல்வராக பதவி ஏற்றது , தமிழர்கள் அரசியல் அதிகாரம் பெற்றதின் முழுமையான சான்று.

அவர் கல்வியை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றதும், தொழில்கள் வளரவும், விவசாயம் செழிக்கவும் , அவர் ஆற்றிய பணிகள் , இன்றும் அணைகளாகவும், தொழில்கூடங்களாகவும் காட்சி தருகிறது.

தமிழர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் , பெரும் பதவிகளை அடைந்த காலம்.அது.

அறுநூறு ஆண்டுகளில் தமிழர்கள் பெறாத தலைமையை , காமராஜர் கொடுத்தார் என்பதால் , அவருக்கு 1961 ஆம் ஆண்டு, அவர் முதல்வராக இருந்தபோது,சென்னையில் சிலை வைக்கப்பட்டது. அறுநூறு ஆண்டுகளுக்கு பிறகு , தமிழர்கள் அரசியல் அதிகாரம் பெற்றதின் பிரதிபலிப்பாகவே இதை பார்க்க முடிகிறது.

பின்பு இரண்டு பிரதமர்களை உருவாக்குவதில் தலைமை பங்கு வகித்து, டெல்லி அரசியல் அதிகார கூட்டத்தில் முதல் வரிசையில் மட்டுமல்லாது, அந்த வரிசையில் முதல் இடத்திலும் இருக்கும் வண்ணம் தம்மை உயர்த்தினார்.

டெல்லி அரசியலில் ,பெருந்தலைவர் தலைமை பதவியில் இருந்த போது, தமிழர்கள் டெல்லி அரசியலில் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிகழ்வுகள் நடந்தது. சி சுப்பிரமணியம் மத்திய விவசாய அமைச்சராக, பசுமை புரட்சி செய்த காலம்.

1967 ஆம் ஆண்டு தேர்தலில் , இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் காமராஜர் தோற்கடிக்க பட்டார் என்பது, தமிழர்கள், தங்கள் தலை மேல், தாங்களே கல்லை போட்ட நிகழ்வாகவே கருதுகிறேன். தமிழர்களுக்கு விடுதலை வாங்கி தந்த தலைவர்கள் தோற்கடிக்க பட்டார்கள். எம் ஜி ஆரும்,எஸ் எஸ் ஆரும் வெற்றி பெற்றனர்.

அண்ணா 1969 ஆம் ஆண்டு மறைந்தது , தமிழ் நாட்டிற்கு விழுந்த அடுத்த அடி .

மத்திய அரசில், தமிழர்கள் செல்வாக்கை இழந்ததால் 1974 ஆம் ஆண்டு, கச்ச தீவை இலங்கைக்கு கொடுத்த போது தடுக்க கூடிய சக்தி அன்றைய தமிழக முதலமைச்சர் மு கருணாநிதிக்கு இருக்கவில்லை.1974 ஆம் ஆண்டு புதுப்பிக்க வேண்டிய காவேரி ஒப்பந்தமும் புதுப்பிக்கப்பட, முடியவில்லை.

திராவிட கட்சிகளின் தமிழ் இன எழுச்சி உணர்வு , இலங்கையில் பற்றி எரிந்தது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பெரும் பகையை உருவாக்கியது.

இன்றைய இலங்கையின் ஆளும் வர்க்கம் , தெலுங்கு நாயக்க வம்சத்தவர்கள் என்பதே உண்மை. மதுரை மநாயக்கர்கள் 17 ஆம் நூற்றாண்டின் கடைசியில் , அவர்களின் ஆட்சியின் கடைசி காலத்தில் , தமிழ் மற்றும் பிராமண படைத்தலைவர்கள்  துணையுடன் இலங்கைக்கு சென்று, புத்த மதத்தை தழுவினர். அனைவரும் சிங்களர்களாக மாறினர்.ஆதலால் இன்றைய சிங்கள அரசியல் தலைவர்களில் தமிழ் வம்சத்தவர்களும் இருக்கிறார்கள். தெலுங்கு மற்றும் பிராமண வம்சத்தவர்களும் சிங்களவர்களாக தோன்றுகிறார்கள்.

இந்த அரசியல் புரிதல் கூட இல்லாத திராவிட கட்சிகள் சிங்களவர்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். விளைவு தமிழர்கள் ஒரு தலைமுறையை இழந்தோம். சொல்லொண்ணா  துயர் அடைந்தோம் என்பதுதான் உண்மை.

திராவிட கட்சிகளின் அரசியல் தமிழ் நாட்டுக்கு மட்டும் உட்பட்டதாக இருப்பதால் 2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் மந்திரி பதவி பெரும், அரசியல் அதிகாரத்தை, தமிழகம் இழந்து நிற்கிறது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டின் முதல்வர்களாக, தெலுங்கு, கன்னட, மலையாள வம்சத்தவர்கள்  அதிகாரம் பெற்றவர்களாக விளங்கினார்கள்.

சிறிது காலம் தமிழர்கள் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி விளங்கினார்கள்.

இன்றைய தமிழக முதல்வர் மு ஸ்டாலின் தெலுங்கு வம்சத்தை சார்நதவர்தான்.

அறுநூறு ஆண்டுகள் வருத்திய அடிமை தழையை வீழ்த்தி , விடுதலை பெற்ற தமிழர்கள்,  தமிழ் நாட்டு அரசின் முதன்மை அமைச்சராக, தமிழர் வர கூடிய  அரசியல் அதிகாரம் பெற வேண்டும். அதர்க்காக ஜனநாயக முறையில் அணைத்து தமிழர்களும் உழைக்க வேண்டும்.என்பதே எனது விருப்பம்.,

வெள்ளி, 30 ஜூலை, 2021

நாதியற்ற தமிழர்கள் ஆனோம் !

 

பெருந்தலைவர் காமராஜர் நினைவாக!

பிரதமர்களை

உருவாக்கிய

தலைவனை தோற்கடித்துவிட்டு,

பிரதமருக்கு

கடிதம் எழுதும்

முதல்வர்களை உருவாக்கினோம்!

 

இரண்டு மீனவர்களை

சுட்டார்கள் என்று

இத்தாலிய மாலுமிகளை

சிறை பிடித்தது கேரளா!

தினமும் சுட்டார்கள்

தமிழகத்தில் கேட்க நாதியில்லை!

 

கட்ச தீவை இழந்தோம்!

காவேரி பிரச்சனையும் தீரவில்லை!

 

பெருந்தலைவா!

உன்னை தோற்கடித்த பின்

குடிக்க செய்தார்கள்!

பின்பு

சாராயம் வடிக்க செய்தார்கள்!

அதன் பின்

கல்வியை விற்றார்கள்!

 

இன்று

தனியார் பள்ளி ஆசிரியர்கள்

துயரம் குறையவில்லை!

கண்ணீர் தீரவில்லை!

அவர்

துயர் துடைப்போர்

யாருமில்லை!

கேட்பதற்கு நாதி இல்லை !

தனியார் பள்ளி ஆசிரியர்

துயரம் தீரவில்லை!

திக்கு தெரியாமல் நிற்கிறோம்!

உன்னை

நினைக்கத்தான் முடிகிறது!

அழ முடிகிறது!

ஆனால்

ஆறுதலுக்கு யாருமில்லை!

அனாதைகளாய்

இந்த

தனியார் பள்ளி ஆசிரியர்கள்!

சனி, 3 அக்டோபர், 2020

ஸ்ரீ லங்காவில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் , நம்மவர்களே!

 ஸ்ரீ லங்காவின் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் , நம்மவர்களே  என்று சொல்கிறேன். ஆனால் பலர் அவர்கள் நம்மவர்கள் இல்லை , அவர்கள் வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள் .  தமிழர்களுக்கு தங்கள் வரலாறு தெரியாது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அதனால்தான் தமிழர் வரலாறு பற்றி  எழுதி வருகிறேன் . வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் பாண்டிய நாட்டு தமிழ் பெண்களை மணந்தார்கள், ஆனாலும் சிங்களவர்கள் தனி இனமாகவே வாழ்ந்தனர்.

நான் சொல்வது  இன்றைய தினம், சிங்கள அரசியலில்  அதிகாரம்  செலுத்துபவர்கள் , நம்மவர்களே என்பதுதான்.

எப்படி என்பதை இப்போது சொல்கிறேன். மதுரை தெலுங்கு நாயக்கர்கள் சிங்கள மன்னர்களுடன் மண உறவு வைத்திருந்தனர். மதுரையில் நாயக்கர்கள் ஆட்சியை முகலாய அதிகாரிகளிடம்  இழந்தபோது , நாயக்க ஆட்சியாளர்கள், தமிழ் மற்றும் பிராமண அதிகாரிகளுடன் , தங்கள் சகோதரி அதிகாரத்தில் இருக்கும் கண்டிக்கு , 17 ஆம்  நூற்றாண்டு  இறுதியில்  சென்றனர். அங்கு தங்கைக்கு குழந்தை இல்லாததால் , தெலுங்கு நாயக்க சகோதரனே ஆட்சியை பெறுகிறான். தங்களை புத்த மதத்திற்கு மாற்றி , சிங்களவர்களாக மாறுகிறார்கள்.

அதன் முதல் கண்டியில் தெலுங்கு நாயக்க ஆட்சி ஆரம்பம் ஆகிறது.  அதன் பிறகு ஆங்கிலேயரிடம் அதிகாரத்தை  இழந்த இவர்கள் , சுதந்திரத்திற்கு பிறகு  மீண்டும்  அரசியல் அதிகாரத்தை பெறுகிறார்கள், தமிழர்களுக்கு சம உரிமை மறுக்கிறார்கள்.

அதனால்தான், பண்டார நாயக்கே (தெலுங்கு) , அதுலத் முதலி (தமிழ்) மற்றும் பிராமண சிங்களவர்கள் அதிகாரத்தில் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். 

இப்போது சொல்லுங்கள், வைகோவும் (தெலுங்கு), கருணாநிதியும் (தெலுங்கு) நம்மவர்கள் என்னும் போது , இன்றைய ராஜ பக்சேயும்  நம்மவர்கள்தானே . ( இவர்கள் துண்டு போடும் முறையை பாருங்கள் ) ஒரே மாதிரி இருக்கும். தெலுங்கு சாயல் தெரியும்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

தமிழ்நாட்டு விடுதலை போரில் காமராஜர்

                                     Chronicle Times: Perunthalaivar Kamarajar History (1934-1945)

                                             With Mentor Sathyamurthy S , Kamarajar K

 அறுநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு ,

 தாழ் பட்டு நின்ற தமிழ் நாட்டு சமூகத்திற்கு 

உரிமை வேண்டி , உழைத்த 

 பாரதி , வ ஊ சி,  சுப்பிரமணிய சிவா, 

 ராஜாஜி ,  முத்துரங்க முதலியார் , முத்துராம லிங்க தேவர்  , சத்தியமூர்த்தி வழி நின்ற  தியாக தலைமுறையின் தலைவர் காமராஜர்!

 அதனால்தான் நீர்  பெருந்தலைவர் !


28 ஆண்டுகள் விடுதலை போரில் ஈடுபட்டு ,

எட்டு ஆண்டுகள் தலைமை ஏற்று ,

கடைசி கட்ட விடுதலை  போரை வழிநடத்தி,

எட்டு ஆண்டுகள் சிறை பட்டு , 

உரிமைகள் என்ற பதக்கத்தை பெற்று தந்து ,

புகழாக , பெருமையாக , தன்னையே செதுக்கிய தலைவரே !

காமராஜரே !


உன் பெயர் சொல்வதால் பெருமை அடைகிறது தமிழ் நாட்டு சமூகம்!

வாழ்க உன் தலைமுறையின் புகழ்.

 வாழ்க இந்திய விடுதலை வீரர்களின் புகழ்.

ஜெய் ஹிந்த் . 

சனி, 8 ஆகஸ்ட், 2020

வெள்ளையனே வெளியேறு - ஆகஸ்ட் 8 போராட்டமும் - காமராஜரும்.

 உரிமை வேண்டி நடந்த , இந்திய விடுதலை போராட்டங்களில் இரண்டு போராட்டங்கள் மிகவும் முக்கியமானவை. ஓன்று  1930 உப்பு சத்தியாகிரக போராட்டம் , மற்றொன்று 1942 வெள்ளையனே வெளியேறு - ஆகஸ்ட் 8 போராட்டம் .
 உப்பு சத்யாகிரகத்திற்கு ,தமிழ் நாட்டு சமூகத்திற்கு தலைமை ஏற்று நடத்திய தலைவர் ராஜாஜி. ஆகஸ்ட் 8 போராட்டத்திற்கு ,தமிழ் நாட்டு சமூகத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர் காமராஜர்.


காமராஜர் , உப்பு சத்தியாகிரக போராட்டத்தில்  , தொண்டராக கலந்து கொண்டு , இரண்டு ஆண்டு சிறை தண்டனை அடைந்தார். 
தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக , ஆகஸ்ட் 8 போராட்டத்தை , தலைமை ஏற்று நடத்தி , மூன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்க பட்டார். அந்த காலத்தில் அவர் , சிறையில் கல்லுடைக்கும் பணியை செய்தார். 


அப்படி தமிழ் நாட்டு சமூகத்தை , விடுதலை போரில் வழி  நடத்திய தலைவர் காமராஜர் , பிற்காலத்தில், தமிழ்நாட்டு முதல்வராக வழிநடத்திய காலத்தில் , முதியோர் பென்ஷனை அறிமுகப்படுத்தி, இலவச கல்வியை அறிமுக படுத்தி, மதிய உணவு திட்டத்தை பள்ளி கூடங்களில் அறிமுகபடுத்தி , வழி நடத்தினார். 
தொழில் கூடங்களை பெருக்கி ( திருச்சி பெல் ), அணை கட்டுகளை உருவாக்கி (ஆழியார் அணைக்கட்டு ), பள்ளி கூடங்களை உருவாக்கி ( ஐ ஐ டி , மெட்ராஸ் ) , தமிழ் நாட்டு சமுகத்தை , வளர்ச்சி பாதையில் வழி  நடத்தினார்.


ஆகஸ்ட் 8 , வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்த அத்தனை விடுதலை வீரர்களையும் நினைத்து , அவர்கள் வழியில் விடுதலை காப்போம்.  அந்த போராட்டத்தின் தலைமை ஏற்று நடத்திய காமராஜர்  வழி  நடப்போம் , பாரதம் காப்போம், வெற்றி பெறுவோம். வளம் பெறுவோம்.  ஜெய் ஹிந்த். 

செவ்வாய், 14 ஜூலை, 2020

உன் பெயர் காமராஜ்

தமிழ் சமூகத்தின் உயர்வின் அடையாளம் காமராஜ்.

                              kamarajar,nehru,indra | Indian history, Indira gandhi, National heroes

உனக்கென்று சொத்து சேர்க்காத தலைவா ! நீவீர்
ஊருக்கென்று சேர்த்த சொத்துக்களில் சில !
திருச்சி பெல், நெய்வேலி நிலக்கரி சுரங்கம்,
திருநெல்வேலி தொழில் பேட்டை, பெரம்பூர் ஐ சி  எப்
ஆவடி டாங்க் , கிண்டி  தொழில் பேட்டை
குந்தா மின் நிலையம் , மேட்டூர் நீர்மின் நிலையம் ,
அம்பத்தூர் தொழில் பேட்டை, தூத்துக்குடி துறைமுகம்
அமராவதி அணைக்கட்டு, ஆரணி ஆறு அணைக்கட்டு
, ஆழியாறு அணைக்கட்டு , வைகை அணைக்கட்டு ,
மணிமுத்தாறு அணைக்கட்டு , கிருஷ்ணகிரி அணைக்கட்டு ,
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி , தஞ்சை மருத்துவ கல்லூரி , மெட்ராஸ்  ஐ ஐ டி , சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, இன்னும் பல . இது ஒன்பது ஆண்டுகளில்  உருவாக்கப்பட்டவைகள்.
இருபத்து  எட்டு ஆண்டுகள் விடுதலை போரில் பங்கேற்பு , அதில்
எட்டு ஆண்டுகள் விடுதலை போரை வழி  நடத்திய
பெருந்தமிழரே !
 நேருவுக்கு பின் யார் என்ற கேவிக்கு இரு முறை பதில் தந்த பெருந்தலைவா ! காமராஜ் என்ற தமிழ் சமூகத்தின்  பெருமையே ! செல்வமே!
இன்று உனது பிறந்த நாள்! தமிழர்களின் எழுச்சி நாள்!கல்வியின்  வளர்ச்சி நாள் !
உனது வழி , பாரதத்தின்  ஒற்றுமையின் வழி ! உனது வழி தமிழர்களின் உயர்வுக்கான வழி !.
உன்னை தினம் நினைத்து , உனது பெயர் சொல்வதால் பெருமை அடைகிறோம் ! தமிழர்களின் முன்னேத்தி ஏறு நீ !
உன் வழி நடப்போம் ! நாட்டின் ஒற்றுமைக்காக உழைப்போம். உயர்வு அடைவோம்!