வெள்ளி, 30 ஜூலை, 2021

நாதியற்ற தமிழர்கள் ஆனோம் !

 

பெருந்தலைவர் காமராஜர் நினைவாக!

பிரதமர்களை

உருவாக்கிய

தலைவனை தோற்கடித்துவிட்டு,

பிரதமருக்கு

கடிதம் எழுதும்

முதல்வர்களை உருவாக்கினோம்!

 

இரண்டு மீனவர்களை

சுட்டார்கள் என்று

இத்தாலிய மாலுமிகளை

சிறை பிடித்தது கேரளா!

தினமும் சுட்டார்கள்

தமிழகத்தில் கேட்க நாதியில்லை!

 

கட்ச தீவை இழந்தோம்!

காவேரி பிரச்சனையும் தீரவில்லை!

 

பெருந்தலைவா!

உன்னை தோற்கடித்த பின்

குடிக்க செய்தார்கள்!

பின்பு

சாராயம் வடிக்க செய்தார்கள்!

அதன் பின்

கல்வியை விற்றார்கள்!

 

இன்று

தனியார் பள்ளி ஆசிரியர்கள்

துயரம் குறையவில்லை!

கண்ணீர் தீரவில்லை!

அவர்

துயர் துடைப்போர்

யாருமில்லை!

கேட்பதற்கு நாதி இல்லை !

தனியார் பள்ளி ஆசிரியர்

துயரம் தீரவில்லை!

திக்கு தெரியாமல் நிற்கிறோம்!

உன்னை

நினைக்கத்தான் முடிகிறது!

அழ முடிகிறது!

ஆனால்

ஆறுதலுக்கு யாருமில்லை!

அனாதைகளாய்

இந்த

தனியார் பள்ளி ஆசிரியர்கள்!

சனி, 3 அக்டோபர், 2020

ஸ்ரீ லங்காவில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் , நம்மவர்களே!

 ஸ்ரீ லங்காவின் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் , நம்மவர்களே  என்று சொல்கிறேன். ஆனால் பலர் அவர்கள் நம்மவர்கள் இல்லை , அவர்கள் வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள் .  தமிழர்களுக்கு தங்கள் வரலாறு தெரியாது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அதனால்தான் தமிழர் வரலாறு பற்றி  எழுதி வருகிறேன் . வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் பாண்டிய நாட்டு தமிழ் பெண்களை மணந்தார்கள், ஆனாலும் சிங்களவர்கள் தனி இனமாகவே வாழ்ந்தனர்.

நான் சொல்வது  இன்றைய தினம், சிங்கள அரசியலில்  அதிகாரம்  செலுத்துபவர்கள் , நம்மவர்களே என்பதுதான்.

எப்படி என்பதை இப்போது சொல்கிறேன். மதுரை தெலுங்கு நாயக்கர்கள் சிங்கள மன்னர்களுடன் மண உறவு வைத்திருந்தனர். மதுரையில் நாயக்கர்கள் ஆட்சியை முகலாய அதிகாரிகளிடம்  இழந்தபோது , நாயக்க ஆட்சியாளர்கள், தமிழ் மற்றும் பிராமண அதிகாரிகளுடன் , தங்கள் சகோதரி அதிகாரத்தில் இருக்கும் கண்டிக்கு , 17 ஆம்  நூற்றாண்டு  இறுதியில்  சென்றனர். அங்கு தங்கைக்கு குழந்தை இல்லாததால் , தெலுங்கு நாயக்க சகோதரனே ஆட்சியை பெறுகிறான். தங்களை புத்த மதத்திற்கு மாற்றி , சிங்களவர்களாக மாறுகிறார்கள்.

அதன் முதல் கண்டியில் தெலுங்கு நாயக்க ஆட்சி ஆரம்பம் ஆகிறது.  அதன் பிறகு ஆங்கிலேயரிடம் அதிகாரத்தை  இழந்த இவர்கள் , சுதந்திரத்திற்கு பிறகு  மீண்டும்  அரசியல் அதிகாரத்தை பெறுகிறார்கள், தமிழர்களுக்கு சம உரிமை மறுக்கிறார்கள்.

அதனால்தான், பண்டார நாயக்கே (தெலுங்கு) , அதுலத் முதலி (தமிழ்) மற்றும் பிராமண சிங்களவர்கள் அதிகாரத்தில் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். 

இப்போது சொல்லுங்கள், வைகோவும் (தெலுங்கு), கருணாநிதியும் (தெலுங்கு) நம்மவர்கள் என்னும் போது , இன்றைய ராஜ பக்சேயும்  நம்மவர்கள்தானே . ( இவர்கள் துண்டு போடும் முறையை பாருங்கள் ) ஒரே மாதிரி இருக்கும். தெலுங்கு சாயல் தெரியும்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

தமிழ்நாட்டு விடுதலை போரில் காமராஜர்

                                     Chronicle Times: Perunthalaivar Kamarajar History (1934-1945)

                                             With Mentor Sathyamurthy S , Kamarajar K

 அறுநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு ,

 தாழ் பட்டு நின்ற தமிழ் நாட்டு சமூகத்திற்கு 

உரிமை வேண்டி , உழைத்த 

 பாரதி , வ ஊ சி,  சுப்பிரமணிய சிவா, 

 ராஜாஜி ,  முத்துரங்க முதலியார் , முத்துராம லிங்க தேவர்  , சத்தியமூர்த்தி வழி நின்ற  தியாக தலைமுறையின் தலைவர் காமராஜர்!

 அதனால்தான் நீர்  பெருந்தலைவர் !


28 ஆண்டுகள் விடுதலை போரில் ஈடுபட்டு ,

எட்டு ஆண்டுகள் தலைமை ஏற்று ,

கடைசி கட்ட விடுதலை  போரை வழிநடத்தி,

எட்டு ஆண்டுகள் சிறை பட்டு , 

உரிமைகள் என்ற பதக்கத்தை பெற்று தந்து ,

புகழாக , பெருமையாக , தன்னையே செதுக்கிய தலைவரே !

காமராஜரே !


உன் பெயர் சொல்வதால் பெருமை அடைகிறது தமிழ் நாட்டு சமூகம்!

வாழ்க உன் தலைமுறையின் புகழ்.

 வாழ்க இந்திய விடுதலை வீரர்களின் புகழ்.

ஜெய் ஹிந்த் . 

சனி, 8 ஆகஸ்ட், 2020

வெள்ளையனே வெளியேறு - ஆகஸ்ட் 8 போராட்டமும் - காமராஜரும்.

 உரிமை வேண்டி நடந்த , இந்திய விடுதலை போராட்டங்களில் இரண்டு போராட்டங்கள் மிகவும் முக்கியமானவை. ஓன்று  1930 உப்பு சத்தியாகிரக போராட்டம் , மற்றொன்று 1942 வெள்ளையனே வெளியேறு - ஆகஸ்ட் 8 போராட்டம் .
 உப்பு சத்யாகிரகத்திற்கு ,தமிழ் நாட்டு சமூகத்திற்கு தலைமை ஏற்று நடத்திய தலைவர் ராஜாஜி. ஆகஸ்ட் 8 போராட்டத்திற்கு ,தமிழ் நாட்டு சமூகத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர் காமராஜர்.


காமராஜர் , உப்பு சத்தியாகிரக போராட்டத்தில்  , தொண்டராக கலந்து கொண்டு , இரண்டு ஆண்டு சிறை தண்டனை அடைந்தார். 
தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக , ஆகஸ்ட் 8 போராட்டத்தை , தலைமை ஏற்று நடத்தி , மூன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்க பட்டார். அந்த காலத்தில் அவர் , சிறையில் கல்லுடைக்கும் பணியை செய்தார். 


அப்படி தமிழ் நாட்டு சமூகத்தை , விடுதலை போரில் வழி  நடத்திய தலைவர் காமராஜர் , பிற்காலத்தில், தமிழ்நாட்டு முதல்வராக வழிநடத்திய காலத்தில் , முதியோர் பென்ஷனை அறிமுகப்படுத்தி, இலவச கல்வியை அறிமுக படுத்தி, மதிய உணவு திட்டத்தை பள்ளி கூடங்களில் அறிமுகபடுத்தி , வழி நடத்தினார். 
தொழில் கூடங்களை பெருக்கி ( திருச்சி பெல் ), அணை கட்டுகளை உருவாக்கி (ஆழியார் அணைக்கட்டு ), பள்ளி கூடங்களை உருவாக்கி ( ஐ ஐ டி , மெட்ராஸ் ) , தமிழ் நாட்டு சமுகத்தை , வளர்ச்சி பாதையில் வழி  நடத்தினார்.


ஆகஸ்ட் 8 , வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்த அத்தனை விடுதலை வீரர்களையும் நினைத்து , அவர்கள் வழியில் விடுதலை காப்போம்.  அந்த போராட்டத்தின் தலைமை ஏற்று நடத்திய காமராஜர்  வழி  நடப்போம் , பாரதம் காப்போம், வெற்றி பெறுவோம். வளம் பெறுவோம்.  ஜெய் ஹிந்த். 

செவ்வாய், 14 ஜூலை, 2020

உன் பெயர் காமராஜ்

தமிழ் சமூகத்தின் உயர்வின் அடையாளம் காமராஜ்.

                              kamarajar,nehru,indra | Indian history, Indira gandhi, National heroes

உனக்கென்று சொத்து சேர்க்காத தலைவா ! நீவீர்
ஊருக்கென்று சேர்த்த சொத்துக்களில் சில !
திருச்சி பெல், நெய்வேலி நிலக்கரி சுரங்கம்,
திருநெல்வேலி தொழில் பேட்டை, பெரம்பூர் ஐ சி  எப்
ஆவடி டாங்க் , கிண்டி  தொழில் பேட்டை
குந்தா மின் நிலையம் , மேட்டூர் நீர்மின் நிலையம் ,
அம்பத்தூர் தொழில் பேட்டை, தூத்துக்குடி துறைமுகம்
அமராவதி அணைக்கட்டு, ஆரணி ஆறு அணைக்கட்டு
, ஆழியாறு அணைக்கட்டு , வைகை அணைக்கட்டு ,
மணிமுத்தாறு அணைக்கட்டு , கிருஷ்ணகிரி அணைக்கட்டு ,
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி , தஞ்சை மருத்துவ கல்லூரி , மெட்ராஸ்  ஐ ஐ டி , சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, இன்னும் பல . இது ஒன்பது ஆண்டுகளில்  உருவாக்கப்பட்டவைகள்.
இருபத்து  எட்டு ஆண்டுகள் விடுதலை போரில் பங்கேற்பு , அதில்
எட்டு ஆண்டுகள் விடுதலை போரை வழி  நடத்திய
பெருந்தமிழரே !
 நேருவுக்கு பின் யார் என்ற கேவிக்கு இரு முறை பதில் தந்த பெருந்தலைவா ! காமராஜ் என்ற தமிழ் சமூகத்தின்  பெருமையே ! செல்வமே!
இன்று உனது பிறந்த நாள்! தமிழர்களின் எழுச்சி நாள்!கல்வியின்  வளர்ச்சி நாள் !
உனது வழி , பாரதத்தின்  ஒற்றுமையின் வழி ! உனது வழி தமிழர்களின் உயர்வுக்கான வழி !.
உன்னை தினம் நினைத்து , உனது பெயர் சொல்வதால் பெருமை அடைகிறோம் ! தமிழர்களின் முன்னேத்தி ஏறு நீ !
உன் வழி நடப்போம் ! நாட்டின் ஒற்றுமைக்காக உழைப்போம். உயர்வு அடைவோம்!