பெருந்தலைவர் காமராஜர் நினைவாக!
பிரதமர்களை
உருவாக்கிய
தலைவனை
தோற்கடித்துவிட்டு,
பிரதமருக்கு
கடிதம்
எழுதும் 
முதல்வர்களை உருவாக்கினோம்!
இரண்டு
மீனவர்களை 
சுட்டார்கள்
என்று 
இத்தாலிய
மாலுமிகளை 
சிறை
பிடித்தது கேரளா!
தினமும்
சுட்டார்கள் 
தமிழகத்தில்
கேட்க நாதியில்லை!
கட்ச
தீவை இழந்தோம்!
காவேரி
பிரச்சனையும் தீரவில்லை!
பெருந்தலைவா!
உன்னை
தோற்கடித்த பின் 
குடிக்க
செய்தார்கள்!
பின்பு
சாராயம்
வடிக்க செய்தார்கள்!
அதன்
பின் 
கல்வியை
விற்றார்கள்!
இன்று
தனியார்
பள்ளி ஆசிரியர்கள் 
துயரம்
குறையவில்லை!
கண்ணீர்
தீரவில்லை!
அவர்
துயர்
துடைப்போர் 
யாருமில்லை!
கேட்பதற்கு
நாதி இல்லை !
தனியார்
பள்ளி ஆசிரியர் 
துயரம்
தீரவில்லை!
திக்கு
தெரியாமல் நிற்கிறோம்!
உன்னை
நினைக்கத்தான்
முடிகிறது!
அழ முடிகிறது!
ஆனால்
ஆறுதலுக்கு
யாருமில்லை!
அனாதைகளாய்
இந்த
தனியார்
பள்ளி ஆசிரியர்கள்! 
